தங்கத்துக்கு மத்திய அரசு புதிதாக விதித்துள்ள கலால் வரி, சுங்க வரியை ரத்து செய்ய வலியுறுத்தி நகைக்கடை வியாபாரிகள் தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் 7 நாட்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு கடந்த மாதம் 17ம் தேதி தாக்கல் செய்த பட்ஜெட்டில், தங்கத்துக்கு புதிய வரியை விதித்தது.இதை கண்டித்து நாடு முழுவதும் உள்ள நகை கடை வியாபாரிகள் 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் நகை கடைகளை அடைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
