மதங்கள் வேறுபட்டாலும் மனிதநேயத்தால் ஒன்றுபட்ட தம்பதிகள் இருவர் ஒருவருக்கொருவர் சிறுநீரகத் தானம் செய்து இரு உயிர்களை வாழச் செய்துள்ள நெகிழ்வூட்டும் சம்பவம் ஒன்று கேரளாவில் நிகழ்ந்துள்ளது.கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள தானூரைச் சேர்ந்தவர் அப்துல்மஜீத். 51 வயதான இவருக்கு சிறுநீரகத்தில் கோளாறு. உடனடியாக மாற்று அறுவை சிகிட்சை மேற்கொள்ளப்படவேண்டிய நிலை. இவருடைய மனைவி தாஹிரா தனது சிறுநீரகங்களுள் ஒன்றை கணவனுக்காக
