ஓசூர்: தமிழகத்தில், தெலுங்கு, கன்னடம், உருது சமஸ்கிருதம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட சிறுபான்மை மொழி பாடங்கள் பயின்ற சிறுபான்மையினருக்கு அரசுக்கல்லூரிகளில் சேர இருக்கை மறுக்கப்படுதாக மாணவர்களின் பெற்றோர்களிடமிருந்து புகார் எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ப்ளஸ் 2 வகுப்பில், தமிழுக்கு பதில், முதல் பாடமாக உருது உள்ளிட்ட சிறுபான்மை மொழி பாடம் படித்த மாணவ, மாணவியருக்கு, தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பில் சேர, சீட் மறுக்கப்படுவதால், பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.