ஹஸாரே தவிர மகாராஷ்டிர அரசு மற்றும் சிபிஐக்கும் விளக்கம்
அளிக்கக் கோரி உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் என்.எல்.சர்மா என்பவர் பொது நலன் வழக்கை தாக்கல் செய்துள்ளார்.அதில், 1995ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை அன்னாவின் அறக்கட்டளை கணக்கு வழக்குகளை முறையாக பராமரிக்கப்படவில்லை. மேலும் மத்திய அரசும், மாநில அரசும் கொடுத்த ஏராளமான நிதி குறித்த கணக்கு வழக்கும் முறையாக இல்லை. எனவே இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று சர்மா கோரியிருந்தார்.
ஏற்கனவே இந்த நிதி முறைகேடு தொடர்பாக பி.எஸ்.சாவந்த் கமிஷன் விசாரணை நடத்தியுள்ளது என்பது நினைவிருக்கலாம். அறக்கட்டளை பணத்தை எடுத்து ஹஸாரேவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டதாகவும், இதுவும் ஒரு வகையில் முறைகேடே என்று சாவந்த் கமிஷன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக