தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.5.11

ஒசாமா பின்லாடன் சுட்டு கொலை ! அமெரிக்கா தகவல்

வாஷிங்டன், மே.2 -அமெரிக்காவின் சிம்மசொப்பனமாக விளங்கிய ஒசாமா பின் லாடன் பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது அமெரிக்க உளவுப்படையினரின் அதிரடி ஆப்ரேஷன் திட்டத்தில் குறி வைத்து காலி செய்யப்பட்டார். அமெரிக்காவின் நீண்டகால ஆசையும், முக்கிய நோக்கமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இவரது பலி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க அதிபர் பராக்ஒபாமா டி.வி.,யில் தோன்றி அறிவித்தார்.
சவுதியில் பிறந்து ஒசாமா பின்லாடன் போராளி அமைப்பான அல்காயிதாவின் தலைவராவார். இவருக்கு வயது 54. ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு போராளி
அமைப்பை உலகமே கண்டு அச்சுறும் வகையில் மிக ரகசியமாக நடத்தி வந்தார்.  இவரது அமைப்பில்
உள்ளவர்கள் தற்கொலை படை தாக்குதல் நடத்துவதில் கில்லாடிகள். அமெரிக்காவே எங்கள் எதிரி என்றும், அவர்களுக்கு எதிராகவே எங்களின் போர் நடக்கும் என ஒசாமா கூறி வந்தார். கடந்த 2001 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ம் தேதி அமெரிக்காவின் புகழ்பெற்ற வர்த்தக இரட்டை கோபுரத்தை விமானத்தை கொண்டு மோதி தூள், தூளாக்கினார். இதில் அமெரிக்கா நிலைகுலைந்து பெரும் அழிவை சந்தித்தது. ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். இந்த நாள் முதல் சர்வதேச குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தார் ஒசாமா.
இவனை உயிருடன் பிடித்து சட்டத்தின் முன்நிறுத்துவோம் என அமெரிக்க அதிபர்கள் புஷ், பராக் ஒபாமா உறுதியாக சொல்லி வந்தனர். ஒசாமா பாகிஸ்தான் பகுதிகளில்தான் பதுங்கி இருப்பார் என அமெரிக்க அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், உயர் அதிகாரிகள் கூறி வந்தனர். ஒசாமாவை பிடிப்பதே முகக்கியப் பணியாக இருக்கும் என்றனர். இதனையடுத்து இந்த பகுதிகள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வந்தன.
ஒசாமாவின் வீடியோ காட்சிகள் அவ்வப்போது ஒளிபரப்பாகி வந்தன. இந்நிலையில் ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டார் என்ற செய்தி வெளிவந்திருக்கிறது. பல முறை ஒசாமா கொல்லப்பட்டார் என்ற செய்தி வருவதும், இதனை அல்காயிதா மறுப்பதும் நடந்திருக்கிறது. ஆனால் இதுவரை இன்றைய ஒசாமா பலி குறித்து அல்காயிதா அமைப்பினர் எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை.
இந்த முறை ஒசாமா பலி உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரது உடலை டி.என்.ஏ., டெஸ்ட் மூலம் ஒசாமாதான் என்று உறுதி செய்யப்பட்டதாக அமெரிக்க மத்திய உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது. இவர் கொல்லப்பட்ட இன்றைய நாள் அமெரிக்காவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பான நாள் என அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ்சின் தலைமை அதிகாரி ஆண்டிகார்ட்டு கூறியுள்ளார்.
சமீபத்தில் அல்காயிதா வெளியிட்ட சி.டி., யில்., தங்கள் தலைவர் ஒசாமாவை கைது செய்தாலோ அல்லது கொலை செய்தாலோ மேற்கத்திய நாடுகளில் அணுகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஒசாமா கொல்லப்பட்டிருக்கிறார்.
பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் நகரில் பதுங்கி இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அதிகாரிகள் மாற்று உடையில் சென்று கண்காணித்து இவரை எப்படி கொல்வது என திட்டமிடப்பட்டது. ஒரு வாரத்தில் இந்த ஆப்ரேஷன் கச்சிதமாக முடிக்கப்பட்டது. எப்போதும் வனப்பகுதி, மலைப் பள்ளத்தாக்கில்தான் ஒசாமா பதுங்கி இருப்பார் என்ற செய்தியைத்தான் கேள்விப்பட்டிருக்கிறோம் இந்தமுறை இஸ்லாமாபாத் நகரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் ஒசாமா தங்கியிருந்திருக்கிறான். இதனையடுத்து உளவு துறை அதிகாரிகள் தாக்குதல் நடத்தி ஒசாமாவை கொன்றனர். இந்த பண்ணை வீட்டின் வெளியே ஒசாமா பிணமானார். அமெரிக்காவின் முக்கியப்பணி முடிந்தது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து 150 கி.மீ., தூரத்தில் இருக்கும் அட்டோபாபாத்தில் ஒசாமா பின் லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியை அதிபர் ஒபாமா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்நிலையில் ஒசாமாவின் மறைவை பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.,யும் உறுதி செய்துள்ளது.

1 கருத்துகள்:

Nalliah சொன்னது…

பின்லேடனின் மரணத்தை அறிவிக்கையில் ஜனாதிபதி பராக் ஒபாமா “நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக’ வலியுறுத்தினார்.

ஒரு கடற்படை அதிரடி குழுவால் நடத்தப்பட்ட அவரின் படுகொலை துளியும் கூட நீதியோடு சம்பந்தப்பட்டதல்ல.

அல்ஹைடா, அமெரிக்க உளவுத்துறையின் நிதியுதவி மற்றும் ஆயுத உதவியுடன்தான் ஸ்தாபிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் பின்வாங்கிய பின்னர் பொஸ்னியாவிலும் கொசோவாவிலும் நிகழ்ந்த யுத்தங்களில் அமெரிக்க இராணுவ உளவுப்பிரிவின் உடைமைகளாக பின்லேடனும், அல்ஹைடாவும் உதவினர்.

அமெரிக்க வெளியுறவுத்துறை கொள்கையில் அடிக்கடி நிகழும், இன்றைய கூட்டாளி நாளைய எதிரியாகிறான் என்பதைப் போலவே சோவியத் ஒன்றியத்திற்கு குழிபறிக்க ஒரு கருவியாக வாஷிங்டனால் தூண்டிவிடப்பட்ட இஸ்லாமிய கிளர்ச்சி, இறுதியில் மத்தியகிழக்கிலும் குறிப்பாக சவூதி அரேபியாவிலும் அதிகரித்துவரும் அமெரிக்காவின் இருப்பிற்கு விரோதமாக மாறியது. கொல்லப்பட வேண்டிய அமெரிக்காவின் எதிரியாக சித்திரிக்கப்பட்ட பின்லேடனுக்கும் அமெரிக்க உளவுப்பிரிவுக்கும் இருந்த இந்த நீண்டகால நெருக்கமான உறவின் வரலாறு, ஊடகங்களால் மூடிமறைக்கப்பட்டது.

செப்ய்டம்பர் 11, 2001இல் நிகழ்ந்த பரிதாபகரமான சம்பவங்களுக்கு குற்றஞ்சாட்டப்பட்ட 9/11 விமானக்கடத்தல்காரர்களில் யாருமே ஆப்கானிஸ்தானில் இருந்தோ அல்லது ஈராக்கில் இருந்தோ வரவில்லை.


நல்லையா தயாபரன்