மாணவர்கள் கால்களில் கருவி பொருத்தப்படுவது அமெரிக்காவின் பல இடங்களிலும் நடைமுறையில் உள்ளது. கருவியை பொருத்தியதால் அம்மாணவர்கள் குற்றவாளிகளோ, சந்தேகப்படும் நபர்களோ என அர்த்தமல்ல. மாணவர்களை ஒரு எல்லைக்குள் கட்டுப்படுத்துவதற்கு பதிலாகவே இக்கருவிகள் பொருத்தப்படுகின்றன என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
குறித்த Tri Valley பல்கலைக்கழகத்தில், படித்துவருவோரில் 90 சதவீதமானோர் இந்திய மாணவர்களாவார்கள். அண்மையில் இப்பல்கலைக்கழகத்தில் சோதனை நடத்திய போது அங்குள்ள மாணவர்களுக்கு போலி விசா அளிக்கப்பட்டிருந்ததும், மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் மாணவர்கள் சேர்க்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
எனினும், இது அப்பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தினதும், விசா செய்து கொடுத்த ஏஜெண்டுக்களினதும் தவறு. ஆனால் பலிக்கடாவாக அகப்பட்டுள்ள இந்திய மாணவர்கள் மீது விசாரணை என்ற பெயரில் தடுப்புமுகாமில் அடைக்கப்பட்டு துன்புறுத்தல், கட்டாயப்படுத்தி காலில் இக்கருவி பொருத்தல் என்பன நடந்தேறியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இது இந்தியர்களை அவமதிக்கும் செயல் என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் வயலார் ரவி ஆகியோர் குற்றம் சுமத்தியிருந்தனர்
குறித்த Tri Valley பல்கலைக்கழகத்தில், படித்துவருவோரில் 90 சதவீதமானோர் இந்திய மாணவர்களாவார்கள். அண்மையில் இப்பல்கலைக்கழகத்தில் சோதனை நடத்திய போது அங்குள்ள மாணவர்களுக்கு போலி விசா அளிக்கப்பட்டிருந்ததும், மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் மாணவர்கள் சேர்க்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
எனினும், இது அப்பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தினதும், விசா செய்து கொடுத்த ஏஜெண்டுக்களினதும் தவறு. ஆனால் பலிக்கடாவாக அகப்பட்டுள்ள இந்திய மாணவர்கள் மீது விசாரணை என்ற பெயரில் தடுப்புமுகாமில் அடைக்கப்பட்டு துன்புறுத்தல், கட்டாயப்படுத்தி காலில் இக்கருவி பொருத்தல் என்பன நடந்தேறியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இது இந்தியர்களை அவமதிக்கும் செயல் என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் வயலார் ரவி ஆகியோர் குற்றம் சுமத்தியிருந்தனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக