தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.11.10

அனாதையாக கிடந்த பெரியவரின் சடலம்- நல்லடக்கம் செய்த திருத்துறைப்பூண்டி TNTJ

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ரயில் நிலையம் அருகில் முஸ்லிம் பெரியவர் ஒருவரின் உடல் இறந்த நிலையில் கிடப்பதாக கடந்த 3-11-2010 அன்று நகர TNTJ விற்கு தகவல் கிடைத்தது.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த நகர நிர்வாகிகள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் இறந்தவரின் சட்டைப்பையில் இருந்த தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டனர். இறந்தவரின் பெயர் முஹம்மது ஜின்னா வயது 54 என்பதும் அவரது ஊர் இளையாங்குடி என்பதும் தெரியவந்தது.

பின்னர் இளையாங்குடி TNTJ மூலம் உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சடலத்தை TNTJ ஆம்புலன்சில் ஏற்றி அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்து பின்னர் TNTJ செலவிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.

TNTJ வின் இந்த மனிதநேய பணியை பார்த்த காவல்துறையினரும் இறந்தவரின் உறவினர்களும் TNTJ வை பாராட்டினர். அல்ஹம்துலில்லாஹ்!

0 கருத்துகள்: