தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.11.10

உலகின் மிக உயரமான அடுக்கு மாடி குடியிருப்பு துபாயில்

துபாய் : ஏற்கனவே 823 மீட்டர் உயரமுள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான பர்ஜ் கலீபா அமைந்துள்ள துபாய் நகரத்தில் 107 மாடிகளை கொண்ட உலகின் மிக உயரமான அடுக்குமாடி குடியிருப்பு அடுத்த ஆண்டுக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

துபாயில் அடுக்கு மாடி குடியிருப்புகள் நிறைந்த துபாய் மெரீனா பகுதியில் அமையவுள்ள பிரின்ஸஸ் டவர் என பெயரிடப்பட்டுள்ள இக்கட்டிடம் 414 மீட்டர் உயரம் கொண்டது என்றும் இதன் கட்டுமான பணிகள் 2011 ஆம் ஆண்டு இறுதிக்குள் கட்டி முடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயரமான கட்டிடங்களின் அமைப்பு குழுவின் படி 78 மாடிகளுடன் 323 மீட்டர் உயரமுள்ள ஆஸ்திரேலியாவில் உள்ள 1 கட்டிடமே தற்போது உலகின் மிக உயரமான அடுக்குமாடி குடியிருப்பாக உள்ளது. ப்ரின்ஸஸ் டவருடன் 91 மாடிகள் கொண்ட எலைட் குடியிருப்பும் 2011க்குள் கட்டி முடிக்கப்படும் என தமீர் ஹோல்டிங் தலைவர் பெட்ரிக்கோ தைபர் கூறினார்.

பொருளாதார நெருக்கடிக்கு முன்பிருந்த விலையுடன் ஒப்பிடுகையில் 50 சதவிகிதம் வரை குறைந்த விலைக்கு கட்டிடங்கள் விற்கப்படுவதாகவும் முதலீட்டாளர்கள் இவ்வாய்ப்பை தவற விட கூடாது என்றும் பெட்ரிக்கோ கூறினார். சீனா, நைஜீரியா, ரஷ்யா உள்ளிட்ட வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவரும் வகையில் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

0 கருத்துகள்: