தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.7.11

சுனில் ஜோஷி கொலைவழக்கு:என்.ஐ.ஏ நீதிமன்றத்தை அணுகும்

sunil joshi
போபால்:ஆர்.எஸ்.எஸ் ஹிந்துபயங்கரவாத இயக்கத்தை சார்ந்த சுனில் ஜோஷி கொல்லப்பட்ட வழக்கின் விசாரணைப் பொறுப்பை தங்களிடம் ஒப்படைக்கோரி தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) மத்திய பிரதேச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளது. இவ்வழக்கு தேவாஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்காக நிலுவையில் உள்ளது.
சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மலேகான்,

9.7.11

சமச்சீர் கல்வி! சிக்கலில் மாட்டிகொண்டிருக்கும் ஜெயலலிதா!

சமச்சீர் கல்வி வழக்கு தொடர்பான விசாரணையின் போது சென்னை உயர்நிதிமன்ற தலைமை நீதிபதி தமிழக அரசுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

வழக்கு நடைபெறும்போது பழைய பாடத்திட்ட புத்தகங்களை அச்சிட நடவடிக்கை எடுத்தது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள தலைமை நீதிபதி, தமிழக அரசு மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடரக்கூடாது என்றும் கூறினார்.

உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் சமச்சீர் கல்வி திட்டம் குறித்து ஆராய தமிழக அரசு நியமித்த 9 பேர் கொண்ட குழு அண்மையில்

நிலமோசடி புகார்கள் குவிகின்றன தமிழக போலீசில் அதிரடி நடவடிக்கை எப்போது ?

தமிழகத்தில் நில மோசடி குறித்து விசாரணை நடத்த போலீசில் சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த பிரிவிடம் தமிழகம் முழுவதும் இருந்து புகார்கள் குவிந்தவண்ணம் உள்ளன.
அனைத்து மாவட்டங்களிலும் நிலமோசடி குறித்து விசாரிக்க சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்ட பின்னர் கடந்த சில வாரங்களில் 550க்கும் மேற்பட்ட புகார்கள் அந்த பிரிவிடம் அளிக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான புகார்களில் உள்ளூர் திமுக நிர்வாகிகள் மீதுதான் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எனினும் அந்த

புதிய நாடாக இன்று உதயமானது தெற்கு சூடான்!!!

ஆப்ரிக்காவில் உள்ள சூடான் நாடு இரண்டாக பிரிக்கப்பட்டு, தெற்கு சூடான் புதிய நாடாக இன்று உதயமானது. "சூடான் நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும்' என்று கோரி, கடந்த 20 ஆண்டுகளாக அந்நாட்டில் உள்நாட்டு போர் நடந்தது. வடக்கு பகுதியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். தெற்கு பகுதியில் பழங்குடி மக்கள் அதிகம் உள்ளனர். உள்நாட்டு சண்டையில் லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.

பத்மநாபசுவாமி கோவில் 6வது ரகசிய அறையை திறக்க தடை

திருவனந்தபுரம், ஜூலை. 9-  திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் 6வது ரகசிய அறையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க பத்மநாபசுவாமி கோயிலில்,மொத்தமுள்ள 6 பாதாள அறைகளில், 5 அறைகளை உச்சநீதிமன்றம் அமைத்துள்ள ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய 7பேர் குழு திறந்து அதிலிருந்த பொருட்களை கணக்கெடுத்து வருகிறது. நீதிமன்ற

தயாநிதிமாறன் ஊடகங்களின் இரை-கலைஞர் வருத்தம்

karunanidhi_dayanithi_001
சென்னை:தயாநிதி மாறன் ஊடகங்களின் பிரச்சாரத்திற்கு இரையாகிவிட்டார் என தி.மு.க தலைவர் மு.கருணாநிதி கூறியுள்ளார். மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் கலைஞர் மு.கருணாநிதி.
இந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி தான் நடைபெறுகிறது.ஊடகங்கள்

கைது பட்டியலில் கலாநிதிமாறன் :புகார்களில் நடவடிக்கை:ஜெயலலிதா உறுதி

கலாநிதி மீதான புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்,” என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.தயாநிதி மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது குறித்து, முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:இது, நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பிரச்னை. முன்னதாகவே அவர் ராஜினாமா செய்திருக்க வேண்டும் அல்லது வெகு முன்பாகவே, பிரதமர் அவரை ராஜினாமா செய்ய வைத்திருக்க வேண்டும். கலாநிதி, மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் மீது சில புகார்கள் வந்துள்ளன; ஆதாரங்களும் கிடைத்துள்ளன.
அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தி.மு.க.,வின் கதை முடிவை மக்கள் ஏற்கனவே முடிவு செய்து விட்டனர்.இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்தார்.

8.7.11

குஜராத் குண்டுவெடிப்பு வழக்கு:விசாரணையை துவக்க அனுமதி

புதுடெல்லி:2008-ஆம் ஆண்டு குஜராத் குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணையை துவக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நீதியான முறையில் விசாரணை நடைபெறுவதற்கு வழக்கை குஜராத்திற்கு வெளியே நடத்தவேண்டுமென குற்றஞ்சாட்டப்பட்டோர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடிச்செய்த நீதிபதிகள் அல்டாமஸ் கபீர், சிரியக் ஜோசப் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரணையை துவக்க அனுமதி அளித்துள்ளது.

சுபாஷ் சந்திர போஸை இழிவுபடுத்திய அமிதாப் மீது வழக்கு!


 பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனியார் தொலைக் காட்சியில் குரோர்பதி 4 என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளார்.

இதற்காக தயாரிக்கப்பட்ட விளம்பரங்களில், இந்திய சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்ட சுபாஷ் சந்திர போஸை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப் பட்டுள்ளதாக முகேஷ் சர்மா என்பவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளார்.

லிபியா எதிர்ப்பாளர்களுக்கு ஆயுதங்களை வழங்கும் பிரான்சு


france weapons
பாரிஸ்:முஅம்மர் கத்தாஃபியின் செல்வாக்கு மிகுந்த பகுதியான திரிபோலியில் அரசு எதிர்ப்பாளர்களுக்கு பிரான்சு ஆயுதங்களை வழங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. ராக்கெட் லாஞ்சர்கள், ஏவுகணை, ரைஃபிள் ஆகியன ஜபல் நஃபூஸா பகுதியில் பிரான்சு சப்ளை செய்வதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்களை மேற்கோள்காட்டி லெ ஃபிகரோ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. நேட்டோ நாடுகளுடன் ஆலோசனை நடத்தாமலேயே பிரான்சு இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான புதையலை கொள்ளையடிக்க திட்டமா?


காஞ்சிபுரம்,  திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலில் எடுக்கப்பட்ட பொக்கிஷங்கள் அனைத்தும் திருவாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜயேந்திரர் தெரிவித்துள்ளார்.

"நீண்ட காலமாக பத்மநாப சுவாமி கோயிலின் பாதுகாவலர்களாக திருவாங்கூர் மன்னர் குடும்பம் தான் இருந்து வந்துள்ளது.

சோனியாவுடன் லாலு சந்திப்பு.. மீண்டும் அமைச்சராகிறார்?

டெல்லி: ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இன்று சந்தித்துப் பேசினார். மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக விலகலாம் என்று கூறப்படும் நிலையில், லாலு மற்றும் அஜீத் சிங் ஆகியோரை கூட்டணியில் சேர்க்க சோனியா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஸ்ட்ராபெரியும் அதன் மருத்துவக்குணமும்!!

வாஷிங்டன்:  தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் போக வேண்டிய அவசியம் ஏற்படாது என கூறுவதுண்டு. 

அதாவது, ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். ஆனால், இந்த விஷயத்தில் ஸ்ட்ராபெரி பழம் ஆப்பிளையே மிஞ்சும் என்பது புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

7.7.11

தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா!

மத்திய ஜவுளித் துறை அமைச்சரும் முன்னாள் தகவல் தொடர்புத் துறை அமைச்சருமான தயாநிதி மாறன் தம்முடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

2G ஊழல் வழக்கில் ஏர்செல்  நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ்  நிறுவனத்துக்கு விற்க ஏர்செல் நிறுவன உரிமையாளர் சிவசங்கரனை மிரட்டினார்  எனக் குற்றச் சாட்டு எழுந்துள்ள நிலையில் சிபிஐ தயாநிதி மாறனை விசாரிக்க சம்மன் அனுப்பும் என்று தெரிகிறது.

நானோ கார் வழங்கி கவ்ரவித்த பள்ளி நிர்வாகம்


மாநில அளவில் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த ஒசூர் ஸ்ரீ விஜய் வித்யாலயா பள்ளி மாணவி கே.ரேகாவுக்கு பள்ளி நிர்வாகம் நானோ கார் வழங்கி கவ்ரவித்தது. 3ம் இடம் பிடித்த மாணவி பி.எஸ்.ரேகாவுக்கு மொபெட் வழங்கப்பட்டது.

மாநில அளவில் பிளஸ் 2 தேர்வில் 1200 க்கு 1190 மதிப்பெண்கள் பெற்று கே.ரேகா முதலிடம் பிடித்தார். மேலும் அதே பள்ளி மாணவி பி.எஸ்.ரேகா 1200 க்கு 1186 பெற்று மாநில

உ.பி.,யில் லஞ்சம் கொடுக்க முடியாததால் நடுரோட்டில் பிரசவம்!


லஞ்சம் கொடுக்க மறுத்த ஏழை கர்ப்பிணி பெண்ணை, அரசு மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததால், அந்த பெண், சாலையோர நடை பாதையிலேயே, குழந்தையை பெற்றெடுத்தார். இந்த பரிதாப சம்பவம், உ.பி.,யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி., மாநிலம் கன்னூச் மாவட்டத்தை சேர்ந்தவர் சுஷில். இவரது மனைவி மம்தா,

குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் மேஜையில் 17 கருணை மனுக்கள்


டெல்லி: குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் மேஜையில் 17 மரண தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்கள் நிலுவையில் உள்ளதாக தகவல் அறியும் சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் கொலை மற்றும் கற்பழிப்பு வழக்கில் சிக்கியவர்கள்.

சுபாஷ் சந்திர அகர்வால் என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்ட விவரத்திற்கு குடியரசுத் தலைவர் அலுவலகம் அளித்த பதில் வருமாறு,

சாமியார்கள் சொத்து, கோவில் புதையல் மக்களுக்கே! கி.வீரமணி!


இந்தியாவில் உள்ள கோயில் சொத்துகள், புட்டபர்த்தி சாயிபாபா போன்றவர்களின் சொத்துகளை மக்கள் வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்தலாம்.

மக்கள் அளித்த பணம் மக்களுக்கே திருப்பித் தரப்படுவதில் தவறில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார். இந்தியாவில் உள்ள முதலாளித்துவத்தை மூன்று வகையாகப் பிரிக்க வேண்டும் என்பார் தந்தை பெரியார்.

"நர" பலிக்கு சிறுவன் பலி, கோயிலை சூறையாடிய பொதுமக்கள் !


ஜூலை. தூத்துக்குடி ஜோதிபாசுநகரை சேர்ந்தவர் வேல்ராஜ். மளிகை கடை வைத்துள்ளார். அங்குள்ள கருமாரியம்மன் கோவில் நிர்வாகியாகவும் உள்ளார். இவரது மகன் குணா என்ற குணசேகர் (வயது 8). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம்வகுப்பு படித்து வந்தான்.

நேற்று மாலை வழக்கம் போல் டீயூசனுக்கு செல்வதாக கூறி சென்றான். இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

மு.க.அழகிரி மனைவி மீது 50 கோடி நில மோசடி புகார் கைதாகலாம் ?


மதுரை அருகே உத்தங்குடி நாகர் ஆலயத்தைச்சேர்ந்த பூசாரி சுப்பிரமணிய அய்யர் முதல்வரின் தனிபிரிவுக்கு புகார் அனுப்பியுள்ளார். அப்புகாரில், ‘’உத்தங்குடி நாகர் ஆலயத்திற்கு சொந்தமான தர்ம சாஸ்தன டிரஸ்ட்டுக்கு நாகேந்திர அய்யர் என்பவர் 1936ம் ஆண்டு 23 ஏக்கர் நிலத்தை வழக்கினார்.
அப்போது இந்த நிலத்தை யாருக்கும் விற்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிலத்தை விற்கலாம் என்று போலியாக ஆவணம் தயார் செய்யப்பட்டது.
அதன் பிறகு கோவையை சேர்ந்த லாட்டரி