தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

27.2.11

புஷ் மீது ஷூ வீசிய முன்ததிர் மீண்டும் கைது

பாக்தாத்,பிப்.26:முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது ஆவேசத்துடன் ஷூவை வீசியெறிந்ததற்காக சிறைத் தண்டனையை அனுபவித்த முன்ததிர் பாக்தாதில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தும் வேளையில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

பாக்தாதில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடுச் செய்திருந்தார் முன்ததிர்.

லிபியாவில் உள்நாட்டு கலகம் - ஷாவேஸின் குருட்டு நியாயம்


கராக்கஸ்,பிப்.26:லிபியாவும், சுதந்திரமும் நீண்ட நாள் வாழவேண்டும். லிபியாவில் கத்தாஃபி எதிர்கொள்வது உள்நாட்டு கலகமாகும் என லத்தீன் அமெரிக்க நாடுகளில் கத்தாஃபியின் நெருங்கி நண்பரான ஷாவேஸ் ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி லிபியாவில் மக்கள் ஏகாதிபத்திய ஆட்சிக்கெதிராக கிளர்ந்தெழுந்த பிறகு முதன்முதலாக தனது கருத்தைப் பதிவுச் செய்துள்ளார் ஷாவேஸ்.

கத்தாஃபிக்கு ஆதரவாக ட்விட்டரில் மேலும் ஷாவேஸ் தெரிவித்திருப்பதாவது: லிபியாவில் ராணுவம் மக்களிடம் கொடூரமாக நடந்துக் கொள்வதையடுத்து கத்தாஃபியின் அரசை தண்டிக்க வேண்டுமெனக்கோரும் அமெரிக்

26.2.11

ஈராக்:எழுச்சிப் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு: 7 பேர் மரணம் ( வீடியோ )

பாக்தாத்,பிப்.26:அமெரிக்க (வீடியோ) கைப்பாவையான பிரதமர் நூரி அல் மாலிக்கின் தலைமையிலான அரசின் மக்கள் விரோதப் போக்கிற்கு எதிராக 'வெகுண்டெழும் தினம்'(day of rage) கடைப்பிடிப்பதையொட்டி ஈராக்கின் நகர வீதிகளில் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்துக்கொண்டனர்.
இந்நிலையில் நூரி அல் மாலிக்கியின் ராணுவத்தினர் நடத்திய அநியாயமான துப்பாக்கிச்சூட்டில் 7 பேர்

10 ஆண்டுகளுக்கு முன்பு சைக்கிள் ஓட்டியவர் தற்பொழுது ஹெலிகாப்டரில் பறக்கிறார் - சர்ச்சையில் சிக்கும் யோகா சாமியார் ராம்தேவ்

புதுடெல்லி,பிப்.26:யோகா என்றாலே பலருக்கு அலாதி பிரியம் உருவாகிவிட்டது. 'வாழுங்கலை' இன்னும் பல்வேறு பெயர்களில் சில மெஸ்மரிஸ கலைகளையும் கற்றுவிட்டு கோடி கோடியாக சம்பாதிக்கின்றார்கள் பல சாமியார்கள்.

'கதவைத்திற காற்று உள்ளே வரட்டும்' என கட்டுரை எழுதிய ஒரு சாமியார் 'கதவை மூடமறந்ததால்' சர்ச்சையில் சிக்கி சீரழிந்தார். இந்நிலையில் பல்வேறு சாமியார்களின் கதைகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்த பொழுதிலும் பலருக்கு யோகா மற்றும் சுவாமிகள் மீதான பற்று விட்டப்பாடில்லை

கத்தாஃபியை சுட்டுத் தள்ளுங்கள் - லிபியா ராணுவத்தினருக்கு யூசுஃப் அல் கர்தாவி வேண்டுகோள்

தோஹா,:சர்வதேச முஸ்லிம் அறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவரும், பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞருமான டாக்டர்.யூசுஃப் அல் கர்தாவி அல்ஜஸீராவுக்கு அளித்த நேர்முகத்தில், லிபியாவின் ஏகாதிபத்தியவாதி முஅம்மர் கத்தாஃபியை சுட்டுக் கொல்லுமாறு அந்நாட்டு ராணுவத்தினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுத்தொடர்பாக அவர் தெரிவித்த கருத்தின் சாரம்சம் வருமாறு: தனது சொந்த நாட்டு மக்களுக்காக ஏவுகணகளை பயன்படுத்தி

லிபியா கலவரத்திற்கு ஒசாமா பின்லேடன் தான் காரணம்: கடாபி


திரிபோலி எங்கள் நாட்டு மக்களை திசை திருப்பி அவர்களை குழப்பி கலவரத்தினை உண்டாக்கியதே அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் தான். இச்சதிச்செயலை அவர் திறமையாக கையாண்டுள்ளார் என லிபியா அதிபர் மும்மர் கடாபி தெரிவித்துள்ளார்.
லிபியாவில் 42 ஆண்டுகளாக அதிபராக இருக்கும் கடாபி பதவிவிலகக் கோரி கடந்த ஒருவாரமாக மக்கள் போராட்டம் நடத்தி

நிலைத்தடுமாறும் கத்தாஃபி

திரிபோலி,பிப்.25:ஏகாதிபத்திய ஆட்சிக்கெதிராக லிபியாவில் மக்கள் எழுச்சி கொளுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் எழுச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது கொடூரமான தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுள்ளார் அந்நாட்டின் அதிபர் முஅம்மர் கத்தாஃபி.

தேசிய தொலைக்காட்சியில் தோன்றி கொலை வெறித்தனமாக பேட்டிக்கொடுத்த அவர், தற்போது மக்கள் எழுச்சியை திசை திருப்பும் முகமாக லிபியாவில் போராட்டத்தை வழி நடத்துவது அல்காயிதா என புழுகியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது: "தெளிவாக தெரிகிறது லிபியாவின் தற்போதையை பிரச்சனையை வழி நடத்துவது அல்காயிதாதான் என. 20 வயதுக்கு மேற்பட்டோர் எவருமே இந்த போராட்டங்களில் கலந்துக் கொள்ளவில்லை. இளைஞர்களை அல்காயிதாவன்முறைக்காக தூண்டுகிறது." என கூறுகிறார் கத்தாஃபி

கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ.200 கோடி பரிமாற்றத்துக்கு பல்வா உதவியுள்ளார்: சி.பி.ஐ.


புதுடெல்லி, பிப். 25- கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு ரூ.200 கோடிக்கு அதிகமான பணம் பரிமாறியதற்கு ஸ்வான் டெலிகாம் நிர்வாகி சாகித் உஸ்மான் பல்வா உதவியுள்ளார் என்று டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில் கைதாகி இப்போது நீதிமன்றக் காவலில் பல்வா உள்ளார். அவரது ஜாமீன் மனுவும், இவ்வழக்கில்

முஸ்லிம்கள் பிரஞ்சு கலாச்சாரத்துடன் கலந்துவிட வேண்டும் - சர்கோஸி

பாரிஸ்,பிப்.25:பிரான்சில் முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமானால் அவர்கள் பிரஞ்சு கலாச்சாரத்துடன் கலந்துவிட வேண்டும் என அந்நாட்டு அதிபர் சர்கோஸி தெரிவித்துள்ளார்.

பன்முக கலாச்சாரத்தை கண்டித்த அவர் ஒன்றுக்கு மேற்பட்ட கலாச்சாரங்கள் மூலமாக முன்னேறுவது என்பது தோல்வியை ஏற்படுத்தும் என விளக்கம் கொடுத்தார்.

பிரான்சு நாட்டைச்சார்ந்த ஒன் தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்துள்ளார். பிரான்சில் வாழும் மக்களின் அடையாளத்தைக் குறித்து நாங்கள் கவலையில் ஆழ்ந்துள்ளோம். ஒரே சமுதாயமாக மாறுவதை

25.2.11

ஷார்ஜாவில் 17 இந்தியர்களுக்கு மரணத்தண்டனை வழங்கப்பட்ட வழக்கு ஏப்ரல் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஷார்ஜா,பிப்.25:ஷார்ஜா கீழ் நீதிமன்றம் மரணத்தண்டனை விதித்த 17 இந்தியர்களுக்கு மன்னிப்பு வழங்க கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் தயார் என அறிவித்ததைத் தொடர்ந்து வழக்கில் சமரசம் ஏற்படுத்த விசாரணை ஏப்ரல் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வழக்கில் கொல்லப்பட்ட பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்த மஸ்ரிஹ் கானின்

புரட்சி அமெரிக்காவிலும், மேற்கத்திய நாடுகளிலும் பரவும் - அஹ்மத் நஜாத்

டெஹ்ரான்,பிப்.24:மேற்காசியாவிலும், வட ஆப்பிரிக்காவிலும் ஆச்சரியப்படத்தக்க வகையில் உருவான மக்கள் புரட்சி அமெரிக்காவிலும், மேற்கத்திய நாடுகளிலும் பரவு காலம் வெகுதூரத்தில் இல்லை என ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களை அடக்கி ஒடுக்குவதில் அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் பிரசித்திப் பெற்றவையாகும். அமெரிக்கா ஆதரவு பெற்ற அடக்குமுறை ஆட்சியாளர்களுக்கெதிராகத்தான் தற்போதைய எழுச்சிப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

1979-ஆம் ஆண்டில் ஈரானில் அமெரிக்க ஆதரவுப் பெற்ற மன்னர் ஆட்சியை

மத்தியதரைக் கடல் பகுதியில் ஈரான் போர்க்கப்பல்கள்: அமெரிக்கா கலக்கம்


வாசிங்டன் மத்தியதரைக் கடல் பகுதியில் ஈரானுக்கு சொந்தமான இரு போர்க்கப்பல்கள் வலம் வருகின்றன. இது அமெரிக்காவை கவலை அடையவைத்துள்ளது.
1979-ல் ஏற்பட்ட இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் சூயஸ் கால்வாயை கடந்து இப்போதுதான் முதல் தடவையாக ஈரான் போர்க்கப்பல்கள் மத்தியதரைக் கடல் பகுதியில் வலம் வருகின்றன. ஈரானின் இச்செயலை அத்துமீறிய

பஹ்ரைன்:புரட்சியில் ஈடுபட்டவர்களுக்கு மன்னிப்பு

பஹ்ரைன் மன்னர்
மனாமா,பிப்.24:பஹ்ரைனில் மன்னருக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதாக மன்னர் அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கைகளை அமெரிக்கா வரவேற்றுள்ளது.

மத்திய கிழக்கில் உள்ள வளமான பஹ்ரைனில் மன்னருக்கு எதிரான போராட்டத்தைக் குறைக்கும் முயற்சிகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளின் படி நேற்று 50 அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இவர்களில்

தேவ்பந்த்:​குறைந்த அதிகாரத்து​டன் மவ்லானா வஸ்தன்வி துணைவேந்தர் பதவியில் தொடருவார்

லக்னோ,பிப்.24:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடிக்கு புகழாரம் சூட்டி பேட்டியளித்ததைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய தேவ்பந்த் துணைவேந்தர் மவ்லானா குலாம் முஹம்மது வஸ்தன்வி தாருல் உலூம் தேவ்பந்தின் துணைவேந்தராக தொடர்ந்து பதவியில் நீடிப்பார்.

ஏற்கனவே துணைவேந்தர் பதவியை ராஜினாமாச் செய்துவிட்டார் என்று வெளியான செய்தியை அவரே மறுத்துவிட்டார். இதனைத் தொடர்ந்து நேற்று தேவ்பந்தில் கூடிய தாருல்

24.2.11

லிபியாவில் உள்ள இந்தியர்களை அழைத்து வர விமானங்கள் தயார்

லிபியாவில் உள்ள இந்தியர்களை அழைத்து வர விமானங்கள் தயார் நிலையில் இருப்பதாக பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.
லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக வெடித்துள்ள புரட்சியில் இதுவரை 300 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தார். இதனால், லிபியாவில் வசிக்கும் 18 ஆயிரம் இந்தியர்களின் நிலைமை குறித்து மத்திய அரசு கவலை அடைந்துள்ளது. எனவே, அவர்களை பத்திரமாக இந்தியா அழைத்து வர முடிவு செய்துள்ளது. இது தவிர, பக்ரைன் நாட்டில் மூன்றரை லட்சம் இந்தியர்களும் ஏமனில் 14 ஆயிரம் இந்தியர்களும் உள்ளன. அந்த நாடுகளிலும் கலவரம் நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக, பாராளுமன்றத்தில் மத்திய வெளியுறவு மந்திரி

பஸ் தின ஊர்வலத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயங்கர கலவரம்


சென்னை, பிப். 24- சென்னையில் நேற்று நடந்த பஸ் தின ஊர்வலம் பயங்கர கலவரமாக வெடித்தது. சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கல்வீசி தாக்கியதில் பெண் துணை கமிசனர், பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 35 போலீசாரும், பொதுமக்கள் 6 பேரும் காயமடைந்தனர்.
சென்னையில் போலீஸ் தடை

லிபியா:ராணுவம் திரிபோலியில் குண்டுவீசித் தாக்கியது, சாலைகளில் பிணக்குவியல்


திரிபோலி,பிப்.23:அரசுக்கெதிராக மக்கள் எழுச்சி தீவிரமடைந்துள்ள சூழலில் லிபியாவின் தலைநகரான திரிபோலியில் ராணுவம் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியது.

ஹெலிகாப்டர்களும், போர் விமானங்களும் குண்டுவீசித் தாக்கியதைத்தொ டர்ந்து ஏராளமானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என மனித உரிமை ஆர்வலர்களை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அரபு லீக்கிலிரு​ந்து லிபியா நீக்கம்

கெய்ரோ,பிப்.23:அரசுக்கெதிராக போராட்டத்தை தொடரும் மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு கொலை வெறிப்பிடித்து சொந்த நாட்டுமக்களை கத்தாஃபியின் அரசு கொன்றுக் குவித்து வரும் சூழலில் அந்நாட்டை அரபு லீக்கிலிருந்து வெளியேற்றியதாக அரபுலீக்கின் பொதுச்செயலாளர் அம்ரு மூஸாதெரிவித்துள்ளார்.

லிபியாவின் நிலைமைகளை குறித்து ஆராய கூடிய அரபுலீக்கின் ஆலோசனைக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. இத்தகவலை அல்ஜஸீரா முதன்முதலில் வெளியிட்டுள்ளது.

பக்ரைனில் அரசியல் கைதிகளை விடுவிக்க மன்னர் சம்மதம்


மனாமா பக்ரைனில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட டியா பிரிவு கைதிகளை விடுவிக்கும்படி மன்னர் உத்தரவிட்டுள்ளார். மேலும், கடந்தாண்டு 25 பேர் மீது போடப்பட்ட வழக்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை துவங்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது

வன்முறையை நிறுத்துமாறு லிபிய அதிபருக்கு ஐ.நா. கோரிக்கை


நியூயார்க், பிப். 23- அமைதி வழியில் போராடிவரும் லிபிய மக்களின் மீது இராணுவத்தை ஏவி தாக்குதல் நடத்துவதை உடனடியாக நிறுத்துமாறு லிபியா அதிபர் கர்னல் கடாபியை ஐ.நா. பாதுகாப்புப் பேரவை கேட்டுக் கொண்டுள்ளது.
ஐ.நா.வின் உயர் அதிகார அமைப்பான பாதுகாப்புப் பேரவை அதன் இம்மாத தலைவரான பிரேசில் தூதர் மரியா லூயிசா ரிபேரோ வயோட்டி தலைமையில்