தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.2.11

மோடியை கைது செய்யக் கோரி சென்னையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்


குஜராத் மாநிலத்தில் 2002 ஆம் ஆண்டு நடந்த கலவரத்தை திட்டமிட்டு நடத்தியவர் நரேந்தி மோடிதான் என்றாலும் அவருக்கு இதில் தொடர்பு இல்லை என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த மோடியின் ஆதரவாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.
குஜராத் மாநில அரசு இந்தக் கலவர வழக்கை சரியாக விசாரணை நடத்தாது என்று கருதிய உச்சநீதி மன்றம் கலவர வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு ளுஐவு என்னும் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தது. இந்தக்குழு தக்க முறையில் விசாரணை நடத்தி 600 பக்க அறிக்கையை சீல் வைத்து உச்சநீதி மன்றத்தில் மே 2010ல் ஒப்படைத்தது.
இந்த அறிக்கை நீதி மன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட மறுநாள் மோடி குற்றமற்றவர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக பாஜகவினர் பொய்ப்பிரச்சாரம் செய்தனர்.அத்வானியே மோடி குற்றமற்றவர் என்று அந்த அறிக்கையில் உள்ளதாக தனது வுறவைவநச ல் எழுதினார்.
இதுதான் உண்மை என்று இந்திய மக்கள் அனைவரையும் பாஜகவினர் நம்ப வைத்து ஏமாற்றி வந்தனர்.
இந்த நிலையில் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட 600 பக்க அறிக்கையை தெஹல்கா இணையதளமும் ஹைட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சியும் அதன் நகலை வெளியுட்டுள்ளனர். பாஜகவின் முகத்திரையைக் கிழிக்கும் வகையால் நரேந்திர மோடிக்கு கலவரத்தில் பங்கு உண்டு என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 13 ஆதாரங்களையும் ளுஐவு வெளியிட்டுள்ளது.
நரேந்திர மோடியை சிறப்புப் புலனாய்வுக்குழு குற்றம் சாட்டவில்லை என்ற பிரச்சாரம் பொய் என்பது தெளிவாகிவிட்டதால் கடமை தவறி கலரத்i முன்னின்று நடத்திய நரேந்திர மோடி அரசை டிஸ்மிஸ் செய்து அவரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்துகிறது.
2 பு அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறை கேடு என்ற பிரச்சனை சில வருடங்களுக்கு முந்தியது என்றாலும் நீரா ராடியாவின் உரையாடல் அம்பலமானவுடன் ராசாவின் ராஜினாவைக் கோரியவர்கள்,பணத்தை விட அதிக மதிப்புள்ள மனித உயிகளைக் கொன்று குவித்த குற்றவாளியான நரேந்திர மோடி விஷயத்தில் மவுனம் காப்பது வியப்பாக உள்ளது.
ராசா குற்றவாளி என்று தீர்ப்பு அளிப்பதற்கு முன்னரும் , ஆதர்ஷ் குடியிருப்பு ஊழலில் மராட்டிய முன்னாள் முதல்வர் மீது குற்றவாளி என்று தீர்ப்பு வருவதற்கு முன்னரும் குற்றச்சாட்டு வந்துவிட்ட காரணத்தினாலேயே பதவி விலகக் கோரிய பாஜக,அதிமுக,மதிமுக மற்றும் சில கட்சிகள் அதை விட பயங்கரமான குற்றச் செயலில் ஈடுபட்டதாக ளுஐவு யால் குற்றம் சாட்டப்பட்ட பின் அவரை ராஜினாமா செய்ய வலியுறுத்தவில்லை.
எனவே மத்திய அரசாங்கம் நரேந்திர மோடி அரசை டிஸ்மில் செய்து கைது செய்ய வலியுறுத்தி இன்று (5.2.11) மாலை 4 மணிக்கு சென்னை – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் திரண்டு தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை மாநிலத் தலைவர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தலைமையேற்று நடத்திவைத்தார்கள்.பொதுச் செயலாளர் ஆர்.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள்.
குறுகிய காலத்தில் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் பல்லாயிரகணக்கானோர் இதில் கலந்து கொண்டு மோடிக்கு எதிரான தங்களின் கண்டனங்களை பதிவு செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஒழுப்ப்பட்ட கோசம்
தூக்கிலிடு! தூக்கிலிடு!
நரேந்திர மோடியை தூக்கிலிடு!
மரண வியாபாரி மோடிக்கு
உதவியாக இருந்தவர்கள்
குஜராத் அரசு செயலர்கள்
காவல்துறையின் ஓநாய்கள்
அத்தனை பேரையும் உடனடியாய்
பதவி நீக்கம் செய்து விடு!
சட்டப் படியாய் அவர்கள் மீது
வழக்குப் பதிவு செய்து விடு!
கயவர்கள் சேர்ந்த சொத்தை எல்லாம்
உடனே ஜபதி செய்திடு!
காவி கும்பலின் ரவுடித்தனத்தால்
வெட்கிக் குனியுது மனிதஇனம்!
பசுவதைக்கெதிராய் கோஷம் போட்டு
மனிதனைக் கொல்லும் பாதகனே!
இரக்கமற்ற அரக்கனே! இரக்கமற்ற அரக்கனே!
இரக்கம் என்பது மனிதப் பண்பு
மிருகத்திற்கும் அது உண்டு
நீ மனிதனுமில்லை மிருகமுமில்லை
என்ன இனம் நீ சொல்லடா?
கயவர் குலம் தான் உன் குலமா?
மௌனமென்ன மௌனமென்ன?
ஜெயலலிதா அம்மையே
போயஸ் தோட்டம் அழைத்து வந்து
விருந்து கொடுக்கப் போறாயா?
மௌனமென்ன மௌனமென்ன?
கருனாநிதி முதல்வரே
டெல்லி சென்று மோடியோடு
போஸ்கொடுக்க தெரியுதோ?
எமதருமை ஹிந்து மக்களே! எமதருமை ஹிந்து மக்களே!
காவி என்ற சொல்லுக்கு
களங்கம் சேர்க்க விடவேண்டாம்
சாது என்ற பேரிலே சூது செய்ய விடவேண்டாம்
டிஸ்மிஸ் செய்! டிஸ்மிஸ் செய்!
மத்திய அரசே டிஸ்மிஸ் செய்!
அரசியலமைப்பிற் கெதிராய் நடந்த
மோடி அரசை டிஸ்மிஸ் செய்!
சுப்ரீம் கோர்ட்டே! சுப்ரீம் கோர்ட்டே!
வெட்கமாக இல்லையா?
எட்டு ஆண்டு ஆன பின்னும்
விசாரணை இன்னும் முடியலையா?
ரகசியம் என்ன ரகசியம் என்ன?
சுப்ரீம் கோர்ட்டே ரகசியம் என்ன?
சிறப்பு புலனாய்வு அறிக்கையை
மறைக்கும் அளவிற்கு ரகசியம் என்ன?
நீதியும் உண்மையும் ரகசியத்தோடு
ஒன்று சேர முடியாதே!
முஸ்லீம்கள் மீது எத்தனையோ
பொய்வழக்கு போட்டீர்கள்
அத்தனை வழக்கிலும் உடனடியாய்
கைது செய்து அடைத்தீர்கள்!
மோடி என்றால் தனிநீதி
முஸ்லீம்களுக்கு எது நீதி!
அத்துல் பிஹாரி வாஜ்பாயி
அத்வானி, மோடி, கட்காரி
ஆர் எஸ் எஸ் அயோக்கியர்கள் அனைவரும்
இரத்தம் குடிக்கும் கட்டேரி!
வேதம் ஓதும் சாத்தான்கள்
சுப்ரமனிய சாமியே, இரட்டை வேட சோவே
எரிக்கபட்ட உயிர்களுக்கும்
துடிதுடித்த உயிர்களுக்கும்
பரிதவித்த உறவினருக்கும்
பதில் சொல் பதில் சொல்
பயங்கரவாத அமெரிக்காவே
உன்னை பயங்கரவாதி என்றதுவே
வெட்கமாக இல்லையா வெட்கமாக இல்லையா
திருப்பி அனுப்பட்டாயே
அனுமதி மறுக்கப்பட்டாயே
செருப்படிகள் பட்டாயே
வெட்கமாக இல்லையா வெட்கமாக இல்லையா?

விஜய் டிவி நிறுவனத்தாருக்கு TNTJ வின் கண்டன கடிதம்


விஜய் டி.வியில் ஒளிபரப்பாகிவரும், ”மகான்” என்ற தொடரில் இடம்பெறும் பாடலில் முஸ்லிம்கள் தங்களது உயிரினும் மேலாக மதிக்கக்கூடிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் விதமாக ஒரு பாடல் வரி இடம்பெறுவதாக தெரியவந்ததை தொடர்ந்து விஜய் டிவி நிறுவனத்தாருக்குதமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்( டி.என்.டி.ஜே ) இன்று   (07.02.11) கண்டன கடிதம் எழுதியதியதோடு நேரில் சென்று உடனடியாக அந்த கண்டனத்திற்குரிய வரிகளை நீக்குமாறு டி.என்.டி.ஜே நேரில் வலியுறுத்தியது.
அதைத் தொடர்ந்து அந்த கண்டனத்திற்குரிய வரியை 09.02.11 அன்று முதல் நீக்கிவிடுவதாக விஜய் டிவி நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

கறுப்பு பண பட்டியல்: இந்தியாவுக்கு வழங்க ஜெர்மனி, சுவிஸ் அரசுகள் தயார்


தங்கள் நாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் போட்டு வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை இந்தியாவிடம் வழங்க தயார் என்று ஜெர்மனி மற்றும் சுவிஸ் அரசுகள் அறிவித்துள்ளன. ஆனால், பட்டியலில் உள்ள பெயர்களை வெளியிட கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளன.
வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு திரும்ப கொண்டுவர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன. இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்திய கறுப்பு பண முதலைகளின் பட்டியலை பெறுவதற்காக, சுவிஸ் நாட்டுடனும், ஜெர்மனியின் கட்டுப்பாட்டில் உள்ள லிச்டென்ஸ்டீன் என்ற குட்டி நாட்டுடனும் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. அதன்படி, லிச்டென்ஸ்டீன் நாட்டில் எல்.ஜி.டி. வங்கியில் கறுப்பு பணம் போட்டு வைத்துள்ள இந்தியர்களின் பட்டியல் கடந்த ஆண்டு இந்தியாவுக்கு வழங்கப்பட்டது. வரிஏய்ப்பு குற்றத்துக்காக, அந்த பட்டியலில் உள்ள 17 நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீசு அனுப்பியுள்ளது. ஆனால், அவற்றின் பெயர்களை பகிரங்கமாக வெளியிட மறுத்து விட்டது. இதற்கு அந்நாட்டுடன் செய்து கொண்ட ஒப்பந்தமே காரணம்.
இந்நிலையில், கறுப்பு பணத்தை வெளிக்கொணர இந்தியாவுக்கு உதவ தயார் என்று ஜெர்மனி அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் நிதி அமைச்சக செய்தித்தொடர்பாளர் கூறுகையில், `இந்தியா கேட்டுக்கொண்டால், மேலும் பல கறுப்பு பண முதலைகளின் பெயர்களை இந்தியாவுக்கு அளிக்க தயாராக இருக்கிறோம். பாதிக்கப்பட்ட நாடுகளின் வரித்துறை அதிகாரிகளுக்கு நாங்கள் பெயர்களை அளிப்பது வழக்கமானதுதான். ஆனால், அந்த பெயர்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பகிரங்கமாக வெளியிடக்கூடாது' என்றார்.
சுவிஸ் நிதி அமைச்சக செய்தித்தொடர்பாளர் கூறுகையில், `இந்தியாவுடனான திருத்தப்பட்ட வரி ஒப்பந்தம் அமலுக்கு வந்தவுடன், இந்தியாவுக்கு தகவல்களை அளிக்க தயாராக இருக்கிறோம். ஆனால் அத்தகவல்களை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும். கோர்ட்டுகளும், அதிகாரிகளும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பகிரங்கமாக வெளியிடக் கூடாது' என்றார்

எதிர்க்கட்சிகளுடன் எகிப்து அரசு ஒப்பந்தம்: அமைதி திரும்ப வாய்ப்பு

கெய்ரோ, பிப்எகிப்தில், அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனால் அங்கு போராட்டம் ஓய்ந்து அமைதி திரும்புவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

எகிப்து நாட்டில் அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலகவேண்டும் என்று கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று 13-வது நாளாக இந்த போராட்டம் நீடித்தது. போராட்டம் காரணமாக தலைநகர் கெய்ரோ உள்ளிட்ட பல நகரங்களில் கலவரம் ஏற்பட்டது. கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டது. சில இடங்களில் அரசின் ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கிளர்ச்சியாளர்களை ஒடுக்க ராணுவமும் களத்தில் குதித்தது. எதிர்ப்பாளர்களை சமாதானப்படுத்தும் வகையில் ஆளும் தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் பதவியில் இருந்து முபாரக் நேற்று முன்தினம் விலகினார். இதேபோல் அவரது மகன் கமால் முபாரக்கும் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகினார்.
அமெரிக்க ஜனாபதி ஒபாமாவும் எகிப்தில் அமைதியை ஏற்படுத்துவதற்காக முயற்சியில் ஈடுபட்டார். இது தொடர்பாக அவர் பல்வேறு நாடுகளின் தலைவர்களை தொடர்பு கொண்டு பேசினார். இதைத் தொடர்ந்து, போராட்டக்காரர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த எகிப்து அரசு முன்வந்தது. துணை அதிபர் ஓமர் சுலைமான் போராட்டம் நடத்தி வரும் எதிர்க்கட்சி குழுக்கள் மற்றும் தடை செய்யப்பட்ட `முஸ்லிம் சகோதரத்துவம்' அமைப்பின் பிரதிநிதிகளை நேற்று அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், போராட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் முகமது எல்பராடி மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்வேறு குழுக்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். கைதான அரசியல் தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை போராட்டக்காரர்களின் பிரதிநிதிகள் வலியுறுத்தினார்கள்.
எகிப்தில் அமைதியான முறையில் அதிகார மாற்றம் கொண்டு வருவது என்றும், ஜனாதிபதி தேர்தலில் பலர் போட்டியிடும் வகையில் அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்வது பற்றி ஆராய நீதிபதிகள், அரசியல் தலைவர்கள் அடங்கிய கமிட்டி அமைப்பது என்றும் பேச்சுவார்த்தையின் போது முடிவு செய்யப்பட்டது. இந்த கமிட்டி வருகிற மார்ச் மாதம் முதல் வாரத்திற்குள் தனது அறிக்கையை வழங்கும்.
அதிபரின் பதவி காலத்தை வரையறுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் சார்பில் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகளை துணை அதிபர் ஓமர் சுலைமான் ஏற்றுக் கொண்டார். அத்துடன் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள போராட்டக்காரர்கள் துன்புறுத்தப்பட மாட்டார்கள் என்றும், பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்பட மாட்டாது என்றும் அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் ஏற்பட்ட தகவலை எகிப்து அரசாங்கம் வெளியிட்டது.
பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட முஸ்லிம் சகோதரத்துவம் அமைப்பின் மூத்த உறுப்பினர் ஒருவர் கூறுகையில்; அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அதன் நல்லெண்ணத்தை தெரிவித்து இருப்பதாகவும், ஆனால் உறுதியான மாற்றங்களுக்கான அம்சங்கள் அதில் இல்லை என்றும் தெரிவித்தார்.
கெய்ரோவில் உள்ள விடுதலை சதுக்கத்தில் நேற்றும் பல்லாயிரக்கணக்கான பேர் கூடி இருந்து அதிபர் முபாரக் பதவி விலக வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசுக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டதை தொடர்ந்து, போராட்டக்காரர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி வழக்கமான பணிகளை கவனிக்க வேண்டும் என்றும், அமைதி திரும்ப முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் ராணுவ தளபதி ஹாசன் அல்-ரவுனி கேட்டுக் கொண்டார்.
எகிப்து அரசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டதை தொடர்ந்து அந்த நாட்டில் அமைதி திரும்புவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில் முபாரக் பதவி விலகக் கோரி போராட்டம் நடத்தி வரும் கிளர்ச்சியாளர்கள் கடந்த வாரம், தலைநகர் கெய்ரோவில் உள்ள அருங்காட்சியகத்தில் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். இதில் அங்குள்ள 2 மம்மிகள் (பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ள மனித உடல்கள்) சேதம் அடைந்ததாக தகவல் வெளியானது. ஆனால் இதை எகிப்து தொல்லியல் துறையின் தலைவர் சாஹி ஹவாஸ் மறுத்து உள்ளார். கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் அருங்காட்சியகத்தில் உள்ள `மம்மி'கள் எதுவும் சேதம் அடையவில்லை என்றும், அங்கிருந்து இரு மண்டை ஓடுகள் மட்டும் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் பி.பி.சி. டெலிவிசனுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்து உள்ளார்

பெனாசிர் கொலையில் முஷாரஃபிற்​கு பங்கு - அறிக்​கை

இஸ்லாமாபாத்,பிப்.7:பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலையில் முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃபிற்கு பங்கிருப்பதாக ஃபெடரல் இன்வெஸ்டிகேசன் ஏஜன்சி தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இச்செய்தியினை தனியார் தொலைக்காட்சி சேனல்கள் வெளியிட்டுள்ளன. அதிகாரப்பூர்வமாக செய்தி இதுவரை வெளிவரவில்லை.

முஷாரஃப் பெனாசிருக்கு அளித்திருக்க வேண்டிய பாதுகாப்பு ஏற்பாட்டில் வீழ்ச்சியை ஏற்படுத்தியதாக முன்னர் வெளியான ஐ.நா அறிக்கை கூறியது.

கடந்த 2007-ஆம் ஆண்டு ராவல்பிண்டியில் நடந்த தேர்தல் பிரச்சார பேரணியில் வைத்து பெனாசிர் கொலைச் செய்யப்பட்டார்.

செய்தி:தேஜஸ்௦ மலையாள நாளிதழ்


மும்பை தாக்குதல் பற்றி விசாரிக்க இந்திய விசாரணை குழுவுக்கு பாகிஸ்தான் அனுமதி மறுப்பு


மும்பை தாக்குதல் வழக்கு குறித்து விசாரிப்பதற்காக பாகிஸ்தானுக்கு செல்ல இருக்கும் இந்திய தேசிய புலனாய்வு குழுவுக்கு பாகிஸ்தான் அனுமதி மறுத்துள்ளது.
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி அன்று பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாக மும்பையில் புகுந்ததால் அவர்களை அனுப்பி வைத்த சதிகாரர்கள் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. அதே நேரத்தில், மும்பை தாக்குதலின்போது உயிருடன் பிடிபட்ட தீவிரவாதி முகமது அஜ்மல் கசாப் மீது தனியாக விசாரணை நடைபெறுகிறது.
இதற்கிடையே, மும்பை தாக்குதல் வழக்கின் முக்கிய சாட்சிகள் மற்றும் இந்தியாவை சேர்ந்த அரசு அதிகாரிகளிடம் விசாரணை நடத்த அனுமதிக்குமாறும், அதற்காக, நீதித்துறை கமிசன் ஒன்றை அனுப்பிவைப்பதாகவும் பாகிஸ்தான் தெரிவித்தது. அந்த கோரிக்கையை இந்தியா பரிசீலித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், மும்பை தாக்குதல் குறித்து விசாரிப்பதற்காக பாகிஸ்தான் செல்ல இருந்த தேசிய புலனாய்வு அதிகாரிகள் குழுவுக்கு பாகிஸ்தான் அனுமதி மறுத்துள்ளது. இது தொடர்பாக இந்தியாவுக்கு பாகிஸ்தான் அனுப்பியுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-
பாகிஸ்தான் நாட்டு சட்டத்தின்படி, எந்தவொரு வழக்கு விசாரணைக்காகவும் எந்தவொரு வெளிநாட்டு புலனாய்வு அமைப்பையும் எங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது. இந்தியாவின் கோரிக்கையையும் பாகிஸ்தானில் இருந்து நீதித்துறை கமிசனை அனுப்புவதையும் ஒப்பீடு செய்யக் கூடாது. ஏனெனில், நீதிமன்ற நடைமுறையின் ஒரு பகுதியாகவே அது அமைகிறது. மேலும், இரு நாடுகளுக்கு இடையே, `பரஸ்பர சட்ட ரீதியான ஒத்துழைப்பு ஒப்பந்தம்' எதுவும் கிடையாது. எனவே, பாகிஸ்தானுக்கு இந்திய புலனாய்வு குழுவை அனுப்பி வைப்பது தொடர்பான கோரிக்கையை ஏற்க முடியாது. இவ்வாறு பாகிஸ்தான் அனுப்பிய செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதனால், சம்பந்தப்பட்ட பாகிஸ்தான் நீதிமன்றத்தில் அனுமதி பெற்ற பிறகே தேசிய புலனாய்வு குழுவை இந்தியா அனுப்ப முடியும். மும்பை தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணையை மேலும் தாமதப்படுத்துவதற்காகவே இந்திய புலனாய்வு குழுவுக்கு பாகிஸ்தான் அனுமதி மறுத்துள்ளது என கருதப்படுகிறது.
இது தவிர, மும்பை தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளை பிடித்து தண்டனை வழங்குவதில் பாகிஸ்தானுக்கு ஆர்வம் இல்லை. ஏனெனில், விசாரணைக்கு எதிராக அந்த நாட்டின் கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அரசு சார்பாக இதுவரை மேல் முறையீடு செய்யப்படவில்லை

அஸிமானந்தாவின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை வெளியிட மறுப்பு: இந்தியா டுடேவை விட்டு வெளியேறினார் ஆசிஷ் கேதான்


புதுடெல்லி,பிப்.8:அஜ்மீர் தர்கா, மக்கா மஸ்ஜித், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்குகளில் முக்கிய குற்றவாளியான சுவாமி அஸிமானந்தாவின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை இந்தியாடுடே எடிட்டர் வெளியிட மறுத்ததால் அப்பத்திரிகையிலிருந்து வெளியேறினார் ஆசிஷ் கேதான்.

டெஹல்கா சார்பாக குஜராத் இனப்படுகொலை குற்றவாளிகளை ரகசிய கேமரா ஆபரேசன் மூலம் வெளிச்சம் போட்டு காட்டியவர்தான் பத்திரிகையாளர் ஆசிஷ் கேதான். இவர் கடந்த ஒன்றரை வருடமாக இந்தியாவின் டுடேவின் கீழ் இயங்கும் ஹெட்லைன் டுடேவில் செய்தியாளராக பணியாற்றி வந்தார். இத்துடன் இந்தியா டுடேவுக்காகவும் செய்தி அறிக்கைகளை தயார் செய்துவந்தார்.

இந்நிலையில், அஸிமானந்தா டெல்லி பஞ்ச்குலா நீதிமன்றத்தில் சுயமாக அளித்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அறிக்கையாக தயார் செய்து இந்தியா டுடேவிடம் அளித்துள்ளார். ஆனால், அதனை வெளியிட இந்தியா டுடேவின் எடிட்டோரியல் டைரக்டர் எம்.ஜே.அக்பர் மறுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்தியா டுடேவிலிருந்து வெளியேறி டெஹல்கா பத்திரிகையில் மீண்டும் இணைந்தார் கேதான். பின்னர் டெஹல்கா அஸிமானந்தாவின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

ஆசிஷ் கேதான் தற்போது டெஹல்காவின் இன்வெஸ்டிகேஷன் பிரிவு எடிட்டராக பணியாற்றி வருகிறார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

8.2.11

முன்னாள் பாகிஸ்தான் அதிபர் முசரப் மீது ஷூ வீச்சு


லண்டன் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முசரப் மீது லண்டனில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் மர்ம நபர் ஒருவர் ஷூவை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் அதிபரான பர்வேஸ் முசரப் கடந்த 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறினார். தற்போது லண்டனில் இருக்கும் முசரப், கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1-ம் தேதி அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் எனும் கட்சியை தொடங்கினார். இந்நிலையில் இக்கட்சியின் பொதுக்கூட்டம் லண்டனில் உள்ள வால்தாமஸ்டவ் மாவட்டத்தில் நடந்தது. இதில் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட முசரப் பேச துவங்கினார் அப்போது பார்வையாளர்கள் கூட்டத்தில் ஒரு வாலிபர் திடீரென தனதுகாலில் இருந்து ஷூவை கழற்றி மேடைமீது வீசி எறிந்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக ஷூ முசரப் மீது விழவில்லை, மேடையின் முன்பகுதியில் விழுந்தது. உடனடியாக பாதுகாவலர்கள் வாலிபரை மடக்கி பிடித்து கைது செய்ததாக ஜியோ செய்தி சேனல் தகவல் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். எனினும் கைது செய்யப்பட்டவர் யார்? என்பது குறித்த விபரம் வெளியிடப்படவில்லை.

குவைத்தில் அரசுக்கெதிராக போராட்டம் நடத்த அழைப்பு

குவைத்.பிப்.7:அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கையை கண்டித்து போராட்டம் நடத்த குவைத்தில் இளைஞர்களின் அமைப்பொன்று அழைப்பு விடுத்துள்ளது.

ஃபிஃப்த் ஃபென்ஸ்(Fifth Fence) என்ற அமைப்புதான் அரசை வெளியேற்ற வேண்டுமெனக்கோரி பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ட்விட்டர் சமூக இணை நெட்வர்க்கில் இதுக்குறித்த செய்தி வேகமாக பரப்பப்பட்டு வருகிறது. பாராளுமன்றத்திற்கு வெளியே நாளை(செவ்வாய்கிழமை) 11 மணிக்கு இப்பேரணி நடைபெறுவதாக அந்த செய்தி கூறுகிறது.

போலீஸ் ஸ்டேசனில் சித்திரவதைக்கு ஆளான இளைஞர் ஒருவர் மரணித்ததுக் குறித்து செவ்வாய்க்கிழமை உள்துறை அமைச்சர் ஷேக் ஜாபிர் காலித் அல் ஸபாஹ் கேள்விக் கணைகளை சந்திக்கவிருக்கும் சூழலில் பாராளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைக்க அரசு தீர்மானித்துள்ளது.

ஆறுவாரத்திற்கு பிறகு பாராளுமன்றத்தை கூட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இளைஞர் ஒருவர் இறந்ததுத் தொடர்பான விசாரணையை தாமதித்த அரசு ஜனநாயக விரோத நடவடிக்கையை பின்பற்றுவதாக எதிர்கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

35 வயதான முஹம்மது கஸ்ஸாய் அல் முதைரியின் உடல் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி போலீஸ் ஸ்டேசனில் மரணித்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுத்தொடர்பான வழக்கை விசாரித்த பாராளுமன்ற கமிட்டி முஹம்மது கஸ்ஸாய் 6 நாட்களாக சித்திரவதைச் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக தெரிவித்தது. இதுத்தொடர்பாக 16 போலீஸார் கைதுச் செய்யப்பட்டனர்.

குவைத் ஆளும் அரசைச் சார்ந்த ஷேக் ஜாபர் இச்சம்பவத்தைத் தொடர்ந்து ராஜினாமாச் செய்தபொழுதிலும், அவரை பதவியில் தொடர குவைத் கேபினட் கேட்டுக்கொண்டது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


புரட்சி:அச்சத்தின் பிடியில் ஃபலஸ்தீன் அதிபர் அப்பாஸ்


பிப்.6:ஃபலஸ்தீனில் அப்பாஸ் தலைமையிலான அரசு எகிப்தில் ஏற்பட்டுள்ள நாடுதழுவிய மக்கள் புரட்சி ஃபலஸ்தீனுக்கும் பரவி அரசியல் மாற்றங்களை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளதாக ஃபலஸ்தீனிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஃபலஸ்தீன் அதிபர் அப்பாஸ் தனது ஃபதாஹ் இயக்கத்துடனும், ஃபலஸ்தீன பாதுகாப்பு அமைப்புகளுடனும் பல தொடரான ஆலோசனை கூட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும் பிரதமர் சலாம் பயாத் எகிப்தின் தாக்கங்கள் ஃபலஸ்தீனில் ஏற்படுமா என்று ஆலோசித்து வருவதாகவும் லண்டனை தளமாக கொண்டியங்கும் அல் ஹயாத் பத்திரிகை தெரிவித்துள்ளது.

விரைவாக ஃபலஸ்தீனில் ஒரு புரட்சி ஏற்பட்டு நாட்டின் பொருளாதார, உள்நாட்டு பாதுகாப்பு , உள்நாட்டு அரசியல் சமநிலை போன்றவற்றை மாற்றிவிடும் என்று ஃபலஸ்தீனிய அதிகாரிகள் அச்சம் கொண்டிருப்பதாக மேலும் அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.
அவ்வாறு ஏற்படும் ஒரு எழுச்சி ஹமாஸ் அமைப்பு மேற்கு கரை பிரதேசத்துக்கு மீண்டும் வருவதற்கான கதவை திறந்து விடும் என்றும் மேற்கு கரையில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான மோதல்களை முறியடித்து விடுமாறு கண்டிப்பான கட்டளை பிறப்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கைதிற்கு பயந்து சுவிஸ் பயணத்தை ரத்துச்செய்​த ஜார்ஜ் w புஷ்


பெர்ன்,பிப்.7:அடுத்தவாரம் திட்டமிட்டிருந்த சுவிஸ் சுற்றுப் பயணத்தில் கைதுச் செய்யப்படுவோம் என பயந்து பயணத்தை ரத்துச் செய்துள்ளார் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் w புஷ்.

வருகிற 12-ஆம் தேதி சுவிட்சர்லாந்தில் நடைபெறவிருகும் நிகழ்ச்சியில் முன்னாள் அதிபர் பங்கேற்கமாட்டார் என அவரது செய்தித் தொடர்பாளர் டேவிட் ஷேர்ஸர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் கைதுச்செய்யப்பட்டு விடுவோம் என அஞ்சி ஜார்ஜ் புஷ் தனது சுற்றுப் பயணத்தை ரத்துச் செய்ததாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

ஆனால், இடதுசாரிகளின் போராட்டம்தான் காரணம் என அவ்வமைப்புகள் தெரிவித்துள்ளன. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கிலிருந்து கைதுச் செய்யப்பட்டவர்களை கொடூரமாக சித்திரவதைச் செய்ததற்காக புஷ்ஷின் மீது வழக்கு பதிவுச்செய்ய தீர்மானித்ததாக மனித உரிமை அமைப்புகள் கூறியுள்ளன.

சுவிட்சர்லாந்தில் சுற்றுப்பயணம் நடத்தவிருக்கும் புஷ்ஷை கைதுச் செய்ய அந்நாட்டு அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

ஜெனீவா நீதிமன்றத்தில் புஷ்ஷின் மீது சித்திரவதைக் குற்றம் சுமத்தி வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுவிட்சர்லாந்தில் ஜார்ஜ் புஷ் கலந்துக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறவிருக்கும் ஹோட்டலுக்கு வெளியே போராட்டத்தில் கலந்துகொள்பவர்கள் ஒரு ஜோடி ஷூக்களுடன் வரவேண்டுமென மனித உரிமை அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன.

கடந்த 2008-ஆம் ஆண்டு ஜார்ஜ் புஷ்ஷின் மீது ஈராக்கின் தலைநகர் பாக்தாதில் வைத்து ஷூவை வீசிய முன்ததர் அல் ஸெய்தியின் தீரச்செயலை நினைவுக்கூறும் விதமாகத்தான் இந்நடவடிக்கை என அவ்வமைப்புகள் கூறியிருந்தன.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

ஈரானில் கைதுச் செய்யப்பட்ட அமெரிக்கரிகளின் மீதான விசாரணை துவங்கியது


டெஹ்ரான்,பிப்.7:அத்துமீறி ஈரானுக்குள் நுழைந்து உளவு வேலையில் ஈடுபட்டதாகக் கூறி கைதுச் செய்யப்பட்ட அமெரிக்கர்களின் மீதான விசாரணை ஈரான் நீதிமன்றத்தில் துவங்கியது.

ஷாரா ஷோர்ட், ஷேன் பார், ஜோஸ் ஃபட்டல் ஆகியோர் ஈரான்-ஈராக் எல்லையில் வைத்து கடந்த 2009 ஆம் ஆண்டு கைதுச் செய்யப்பட்டனர்.

ஈரானில் அமெரிக்காவின் பிரதிநிதியான லிவியா லியு அகோஸ்டி உட்பட எவரையும் நீதிமன்ற விசாரணை அறையில் அனுமதிக்கவில்லை. உடல்நல பிரச்சனைகளை கவனத்தில் கொண்டு ஷாரா ஷோர்ட் என்ற பெண்ணிற்கு கடந்த செப்டம்பரில் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது. அவர் தற்பொழுது அமெரிக்காவில் உள்ளார்.நவம்பரில் விசாரணை துவங்கும் என முன்னர் அறிவித்திருந்த பொழுதிலும் அப்பெண்மணி ஆஜராகவில்லை என்பதால் விசாரணை தேதி ஒத்திவைக்கப்பட்டது. இதர இரண்டு பேரை இன்று ஈரானின் புரட்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவர் எனக் கருதப்படுகிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

DiggGoogle Bookmarksreddit

சங்க்பரிவா​ர் மற்றும் காங்கிரஸின் போராட்டத்தால் விடுதலைச் செய்யப்பட்ட 'சிமி' உறுப்பினர்​கள் மீண்டும் கைது

புதுடெல்லி,பிப்.7:குடியரசு தினத்தில் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலைச் செய்யப்பட்ட 5 'சிமி' இயக்க உறுப்பினர்களை வி.ஹெச்.பி-யின் போராட்டத்தைத் தொடர்ந்து மீண்டும் கைதுச் செய்துள்ளது மத்தியபிரதேச மாநில போலீஸ்.

33 மாத சிறைவாசத்திற்கு பிறகு இவர்களை விடுதலைச் செய்ய சிபாரிசுச் செய்த சிறைத்துறையின் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் மற்றும் சிறை துணை சூப்பிரண்ட் ஆகியோருக்கெதிராக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

சிறையிலிருந்து விடுதலையான 'சிமி' உறுப்பினர்களை மீண்டும் கைதுச் செய்த நடவடிக்கையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை அணுகப்போவதாக எதிர்தரப்பு வழக்கறிஞர் சந்தோஷ் சவ்ராடியா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸின் காவி முகம்'சிமி' உறுப்பினர்கள் விடுதலைச் செய்யப்பட்டதை எதிர்த்து மத்திய பிரதேச மாநில விசுவஹிந்து பரிஷத்தும், பஜ்ரங்தள்ளும் போராட்டம் நடத்தின. ஆனால், மதசார்பற்ற வேடம் புனையும் காங்கிரஸ் கட்சியும் 'சிமி' உறுப்பினர்களின் விடுதலையை எதிர்த்து போராட்டம் நடத்தியது அக்கட்சியின் போலி மதசார்பற்ற வேடத்தை அம்பலப்படுத்தியுள்ளது.

சங்க்பரிவார் மற்றும் காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தைத் தொடர்ந்து 'சிமி' உறுப்பினர்களை மீண்டும் வெள்ளிக்கிழமை இரவு உஜ்ஜயினில் வைத்து போலீசார் கைதுச் செய்தனர்.

தேசவிரோத இலக்கியங்களை கைவசம் வைத்திருந்ததாகவும், ரகசியக் கூட்டம் நடத்தியதாகவும் குற்றஞ்சாட்டி 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31-ஆம் தேதி ஜாதில் பர்வஜ், அயாஸ் ரியாஸ் அஹ்மத், அக்பர் அஃப்ஸல் கான், மெஹ்ருத்தீன் ஷேக், இர்ஷாத் அலி ஆகியோர் கைதுச் செய்யப்பட்டனர். ஐந்து வருட சிறைத்தண்டனை இவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

முன்னாள் வி.ஹெச்.பி உறுப்பினரான பாலகிருஷ்ண கேதார், ஸோனு ஷேக்வாத் ஆகியோர்தான் அரசுதரப்பின் முக்கிய சாட்சிகள். விசாரணையின் போது எதிர்தரப்பு வழக்கறிஞரின் கேள்விக்கு பதிலளித்த முக்கிய சாட்சிகளில் ஒருவரான பாலகிருஷ்ண கேதார் இந்தியாவை இஸ்லாமிய மயமாக்குவது தொடர்பான கூட்டத்தை 'சிமி' உறுப்பினர்கள் நடத்தியதை தான் காணவில்லை என தெரிவித்தார். ஆனாலும், நீதிமன்றம் 'சிமி' உறுப்பினர்களுக்கு அநியாயமாக தண்டனை வழங்கியது.

சிறை வாழ்க்கையில் நன்னடத்தையைக் கருத்தில்கொண்டு சுதந்திரம் மற்றும் குடியரசு தினத்தின்போது கைதிகளை விடுதலைச் செய்வது வழக்கமாகும். அதனடிப்படையில் நன்னடத்தையைக் கருத்தில்கொண்டு 'சிமி' உறுப்பினர்கள் 5 பேரும் விடுதலைச் செய்யப்பட்டனர். இதற்கெதிராகத்தான் வி.ஹெச்.பி உள்பட சங்க்பரிவார பயங்கரவாதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மூன்றுகோடி ரூபாய் பணத்தை சிறைத்துறை அமைச்சர் உள்பட பல லஞ்சமாக பெற்றுக்கொண்டு 'சிமி' உறுப்பினர்களை விடுதலைச் செய்ததாக போலி மதச்சார்பின்மை பேசும் காங்கிரஸ் போராட்டத்தில் குதித்தது. இதனைத் தொடர்ந்து உஜ்ஜையின் கச்சோட் சப்-ஜெயில் துணை ஜெயிலர் சஞ்சீவ் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் சிறைத்துறை பொறுப்பை வகிக்கும் முதன்மை செயலாளர் சுதேஷ்குமார், சிறை டி.ஜி.பி வி.கெ.பவார் ஆகியோரை அத்துறைச் சார்ந்த பொறுப்பிலிருந்து மாற்றியது மத்தியபிரதேச பா.ஜ.க அரசு.

இதற்கிடையே, தேசத்துரோக குற்றம் சுமத்தி சிறையிலடைக்கப்பட்ட 'சிமி' உறுப்பினர்கள் 5 பேரை பணம் வாங்கிவிட்டு விடுதலைச் செய்ததாக குற்றஞ்சாட்டை எழுப்பி, இச்சம்பவத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனவும், சிறைத்துறை அமைச்சர் ஜகதீஷ் தேவரை அப்பதவியிலிருந்து நீக்கவேண்டுமென மத்திய பிரதேச காங்கிரஸ் கமிட்டி கோரிக்கை விடுத்துள்ளது.

பெரும் சதி இதில் நடந்துள்ளதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கெ.கெ.மிஷ்ரா கூறுகிறார். இச்சம்பவத்தின் தீவிரத்தை கவனத்தில் கொண்டு சி.பி.ஐ விசாரணைக்கு முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் சிபாரிசுச் செய்யவேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கு நற்சான்றிதழ் வழங்கிவிட்டு அதிகாரிகளின் மீது குற்றத்தை சுமத்தியதிலிருந்து அரசின் இரட்டை வேடம் தெளிவானதாக அவர் கூறுகிறார்.

அப்பாவிகளை விடுதலைச் செய்ததற்காக கூப்பாடு போடும் காங்கிரஸ்தான் மத்தியிலும் ஆட்சி செய்கிறது. ஆனால், நாட்டில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் ஒருவரின் பெயர் வெட்ட வெளிச்சமான போதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறது அக்கட்சி தலைமையிலான அரசு.

நேற்று முன்தினம் பாகிஸ்தான், ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள இந்தியாவுக்கு துணிச்சல் இல்லை என குற்றஞ்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


கஷ்மீர் குறித்த ஆவணப் படத்திற்கு இந்திய சென்சாரில் போராட்டம்


பிப்.6:அஷ்வின் குமார் இயக்கிய கால்பந்து விளையாட்டு பற்றிய இந்திய ஆவணப் படத்திற்கு சென்சார் போர்டு சான்றிதழ் வழங்குவதில் போராட்டம் நடந்து வருகிறது.

கஷ்மீரில் பிறந்த பாஷ்ராத் என்கிற திறமையான கால்பந்து வீரர், பிரேசிலில் கால்பந்து பயிற்சி எடுக்க முயற்சி செய்யும் போது தான் கஷ்மீரி என்பதால் அவர் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார் என்பதை சொல்லும் படம்.

இந்த இயக்குனர் இதற்கு முன் இயக்கிய 'லிட்டில் டெரரிஸ்ட்' என்கிற குறும்படம் 2004 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதிற்கு பரிசீலனை செய்யப்பட்டது. இவர் ரோடு டு லடாக்(2003), தெ பாரெஸ்ட்(2008), டேஸ்டு இன் டூன் (2010) போன்ற படங்களை இயக்கியவர். ஆஸ்கருக்கு பரிசீலனை செய்யப்பட்ட இவரது 'லிட்டில் டெரரிஸ்ட்' உலகெங்கும் நூற்றி மூன்று திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது.

இப்போது இவர் இயக்கி இருக்கும் 'இன்ஷா அல்லாஹ் புட்பால்' (Inshaallah football) என்று பெயரிடப்படுள்ள இந்த படம் கடந்த அக்டோபர் மாதம் தென் கொரியாவில் நடைபெற்ற புசான் சர்வதேசிய திரைப்பட விழா' (Pusan International Film Festival) மற்றும் டிசம்பர் மாதம் நடைபெற்ற 'துபாய் சர்வதேச திரைப்பட விழா' (Dubai International Film Festival) ஆகியவற்றில் கலந்து கொண்டு பாராட்டுகளையும் விருதுகளையும் வென்றது.

ஆனால் இந்தியாவில் வெளியிட இந்திய சென்சார் போர்டை அனுகியபோது முதலில் இந்த படத்தை தடை செய்ததாகவும் அதன் பின் 'ஏ' சான்றிதழ் வழங்கியதாக சொல்லப்படுகிறது. அதாவது இந்த படத்தின் இயக்குனர் அஷ்வின் குமார் டிசம்பர் 23, 2010 அன்று தனது 'ட்விட்டர்' பக்கத்தில் இந்த படத்தை இந்திய சென்சார் போர்டு தடை செய்துள்ளதாக அறிவித்துள்ளது, இருந்தும் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பிற்கு காத்திருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். இதனை மறுத்து ஷர்மிளா தாகூர் மறுநாள் 'தி ஹிந்து' நாளிதழில் பேட்டி அளித்து இருந்தார். இரு முறை நிராகரிக்கப்பட்டு பிறகு இந்த படத்திற்கு இறுதியில் 'ஏ' சான்றிதழ் வழங்கியதாக சொல்லப்படுகிறது.

கால்பந்து ரசிகர்களுக்கு என்று எடுக்கப்பட்ட திரைப்படமான 'இன்ஷா அல்லாஹ் புட்பால்' படத்தில் சித்தரவதை செய்வதை விவரிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் சென்சார் சான்றிதழ் கொடுக்க மறுக்கப்படுகிறது என்று 'அவுட்லுக்' செய்தி வெளியிட்டு இருக்கிறது.

'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பத்தை மறுத்து இந்திய சென்சார் போர்டிற்கு பெரிய நெடிய கடிதம் ஒன்றை இயக்குனர் அஷ்வின் எழுதி 'ஃபேஸ்புக்' மூலம் வெளியிட்டு இருந்தார். அதில் 'ஏ' சான்றிதழ் வழங்கியதால் பெரும்பாலான திரையரங்குகள், தொலைக்காட்சி சானல்கள், டி.டி.ஹெட்ச் போன்றவற்றால் நிராகரிக்கப்படுவதை குறிப்பிட்டு மறுபரிசீலனை செய்து 'U/A' சான்றிதழ் வழங்க முயற்சித்து இருந்தார்.

டெஹல்கா இதழ் பேட்டியின் போது இதை ஷர்மிளா தாகூரிடம் கேட்ட போது அந்த காட்சி நீக்கப்பட்டால் அந்த படத்திற்கு 'U/A' சான்றிதழ் வழங்கலாம் என்று பதில் அளித்து இருக்கிறார். இதற்கு அஷ்வின் குமார் "இது கற்பனை கதை அல்ல, கஷ்மீரிகளின் வாழ்கையில் தினமும் நடக்கும் உண்மை கதையை உலகம் அறிவதற்காகவே எடுக்கப்பட்டது" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
source:ஊடகம்

கம்போடியா-தாய்லாந்து எல்லையில் கடும் போர்


போனேபென், பிப்.7   தாய்லாந்து-கம்போடியா எல்லையில், இரு நாடுகளின் ராணுவ வீரர்கள் துப்பாக்கி மற்றும் பீரங்கி தாக்குதல்கள் நடத்தினர். கம்போடியாவில் போனேபென் மாகாணத்தில் 11-ம் நூற்றாண்டு பழமைவாய்ந்த பிராஹ் வைகீர் எனும் கோயில் உள்ளது. இந்த கோயிலை கைப்பற்றுவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.

கடந்த வியாழன்று தாய்லாந்து ராணுவத்தினர் திடீரென கம்போடியா எல்லையான போனோபென் பகுதியில் நுழைந்து கோயிலை பிடிக்க முயற்சித்தனர். இதற்கு கம்போடியா ராணுவத்தினர் பதிலடி கொடுத்தனர். இதனால் இருதரப்பிலும் பீரங்கி தாக்குதல் நடந்தது. இதில்20 கிமீ.சுற்றளவு கொண்ட கிராமத்தைச் சேர்ந்த 700 குடும்பங்களை சேர்ந்த 2000 பேர் அக்கிராமத்தினைவிட்டு வெளியேறியுள்ளனர். தொடர்ந்து மூன்றாவது நாளாக இரு தரப்பிலும் துப்பாக்கி சண்டை ஏற்பட்டுள்ளதாகவும் இதில் 4 பேர் பலியாகியுள்ளதாகவும் ஜின்கூவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு ஜுலை 7-ம் தேதி இக்கோயிலை ஐ.நா. உலக கலாச்சார சின்னமாக அறிவித்தது. கம்போடியாவில் எல்லைப்பகுதியில் உள்ள அண்டைநாடான தாய்லாந்து இக்கோயிலை ஆக்கிரமிக்க முயற்சி செய்து வந்தது. எல்லையில் கோயில் அருகேயுள்ள 1.8 சதூர மைல்கள் (4.6 சதுர கி.மீ இடத்தினை தாய்லாந்து உரிமை கோரி வருகிறது. இதற்கு கம்போடியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இதனால் கம்போடியா- தாய்லாந்து எல்லையில் பதட்டம் நிலவுகிறது. இருநாடுகளின் ஆதிக்க போட்டியால் கலாச்சாரமிக்க கோயிலுக்கு சேதம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே கம்போடியா பிரதமர் ஹூன்சென், எல்லைப்பிரச்னை குறித்து ஐ.நா.பாதுகாப்புச்சபை தாய்லாந்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

7.2.11

செவி சாய்ப்போம்

சமீபத்தில் நண்பர் ஒருவர் கூறிய குட்டிக்கதை. மனநல காப்பகத்திற்கு உணவு வழங்கும் பணி செய்யும் ஒரு ஓட்டுனர் வழக்கம்போல் உணவை வழங்கிவிட்டு வீடு திரும்ப எத்தனித்தார்.

அப்பொழுதுதான் ஒரு டயரின் நான்கு போல்ட்களும் பழுதடைந்திருப்பதை கண்டார். அருகிலோ வாகனத்தை பழுது பார்க்கும் கடைகள் எதுவும் கிடையாது. என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தார். அங்கு வந்த ஒரு மனநிலை