மும்பையில் கடைகள், செல்போன் ரீசார்ஜ் கடைகள், எஸ்டிடி பூத்களில் நீண்ட தூரம் மற்றும் புறநகர் ரயில் டிக்கெட்களைவிற்கும் திட்டம் அமலுக்கு வருகிறது.மும்பை புறநகர் ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுப்பதற்கு எப்போதும் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இதை தவிர்ப்பதற்காக, ஸ்மார்ட் கார்டு மற்றும் ரயில் டிக்கெட் கூப்பன்களை ரயில்வே அறிமுகப்படுத்தியது. அப்படியும் கூட்டம் குறையவில்லை.
